Pages

18 September 2013

வெங்காயம்  ஏன் கண்ணீரை வரவழைக்கிறது ?



வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது.இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது.அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.



23 November 2012

வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் !



கடவுள் ஒருவரே !
கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபடவேண்டும் !
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கொடுக்ககூடாது !
மாமிச உணவை உண்ணக்கூடாது !
ஜாதி, மத வேறுபாடு கூடாது !
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும் !
பசித்த உயிர்களுக்கு உணவளித்து ஆதரித்தும், உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் !
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது !